பண்டிகைகள் - அந்தந்த மத நம்பிக்கையாளர்கள் தங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சந்தோசமாகக் கொண்டாடப் படுவதற்காக மதங்கள் ஏற்படுத்திய வழிமுறை. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு, புனிதவெள்ளி என கிறிஸ்தவர்களும் தீபாவளி,ஆயுத பூசை என இந்துக்களும் ரம்ஜான், பக்ரீத் என முஸ்லிம்களும் ஒவ்வொரு வருடத்திலும் சில நாட்கள் கொண்டாடுகின்றார்கள்.
இவையல்லாமல் பொங்கல்,ஓணம்,யுகாதி போன்ற சமூக/இன ரீதியான பண்டிகளும் கொண்டாடப் படுகின்றன. அனைத்து மத பண்டிகைகளின் நோக்கமும் மக்கள் சந்தோசமாகவும் நன்றியுடையவர்களாகவும் இருக்க
வேண்டும் என்பதே.
உண்மையில் அனைத்து பண்டிகைகளும் மக்களுக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறதா? என்று நடுநிலையாக சிந்திக்க வேண்டியது நம் கடமையாகும்.
முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது குர்பானியின் போது உணவுக்கு ஏற்ற கால்நடைகளை இறைவன் பெயரால் அறுத்து தானும் உண்டு, உறவினர், அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது பசுவை தெய்வமாக வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை.
கிறிஸ்தவர்களின் பண்டிகையின்போது மது அருந்துதல், ஆண்-பெண் கட்டுப்பாடின்றி ஆடிப்பாடுதல் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு ஈடுபாடில்லை. அர்த்தமற்ற கேளிக்கைகளையும், அனாச்சாரங்களையும்
இஸ்லாம் அவர்களுக்கு தடுத்துள்ளதால் ஒரு சாராருக்கு மகிழ்சியான பண்டிகை இன்னொரு சாராருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.
இந்துக்களின் பண்டிகையின் போது செய்யப்படும் சில சடங்குகளும், மேட்டுக்குடி இந்துக்களில் சிலர் மது அருந்தியும் இன்னும் பிற கேளிக்கைகளிலும் ஈடுபட்டு தங்கள் பண்டிகளைகளைக் கொண்டாடுகின்றனர்.
இதுவும் இஸ்லாமியருக்கு ஏற்புடையதாக இல்லை. இப்படி ஒருவர் சந்தோசமாகக் கொண்டாடும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் இன்னொருவருக்கு கொண்டாட்டத்தையும் சந்தோசத்தையும் கொடுக்க முடியவில்லை.
சரி, அனைத்து மக்களும் பொதுவாக ஒரு பண்டிகையைக் கொண்டாடலாமே என்ற வாதம் நியாயமாகப் படலாம். பிற மத வழிபாடுகளற்ற அல்லது பிறர் மதக் கொள்கையுடன் ஒத்துவராத பண்டிகைகள் சாத்தியமா? எனப் பார்ப்போம்.
தொடரும்...
Monday, October 24, 2005
Thursday, October 20, 2005
அறிமுகம்
தமிழ் நெஞ்சங்களுக்கு, இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!
தமிழ்மணத்தின் மூலம் "நல்லடியார்" என அறியப்பட்ட நான் <<எதிரொலி>> என்ற வலைப்பூவில் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும் சில எழுதிய அவதூறுகளுக்கு விளக்கம் சொல்லும் கடமையில் எழுதி வந்தேன்.
எனது வலைப்பூ பதிவுகள் http://athusari.blogspot.com என்ற முகவரியில் செயல்பட்டு வந்த போழ்தும், தமிழ்மணம் நிர்வாகிகளின் புதிய விதிமுறைகள் மதம் சார்ந்த அல்லது துவேச கருத்துக்கள் சசத்தியமுள்ள வலைப்பூக்களை திரட்டுவதில்லை என்ற புதிய விதியால் எனது வலைப்பூவும் பட்டியலிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான வலைப்பூக்களும் பட்டியலிலிருந்து நீக்கப்படுள்ளன.
தள நிர்வாகிகளின் இத்தகைய கட்டுப்பாடு தேவையானது என்பதைச் சொல்லிக் கொள்ளும் இதே நேரத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மொழியால் தமிழன்! தேசத்தால் இந்தியன்! மதத்தால் இஸ்லாமியன்! உணர்வால் மனிதன். இதுதான் என் நிலைப்பாடு.
இணையத்தில் சாதாரண வாசகனாக இருந்த என்னை வேதனைப்படுத்தியது ஒன்று உண்டென்றால், இஸ்லாத்திற்கு எதிரான வலைப்பூக்கள். இதுவரை தமிழல்லாத மொழிகளில் அது போன்ற தளங்கள் உலகலாவிய அளவில் இயங்கி வந்தபோது எழாத வருத்தம் சக தமிழர்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயலும் சில சக்திகளின் துவேச எழுத்துக்களால் எழுந்தது.
மத நம்பிக்கை என்பது மனித நல்வழிப்படுத்த தோன்றியவை என சொல்லும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இதுவரையிலும் சகமனிதர்களுடன் நண்பணாய், அண்டை வீட்டுக்காரணாய், சக ஊழியனாய் இருந்து வருகிறேன். இனியும் இதில் மாற்றமிருக்காது.
என் நம்பிக்கையை சிலர் ஏளனப்படுத்தியதாலும் அவதூறாக எழுதியதாலும் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டி மட்டும் இஸ்லாம் சம்பந்தமாக எழுதி வந்தேன். நான் இஸ்லாமிய பிரச்சாரகனோ அல்லது எழுத்தாளனோ அல்ல. நான் அறிந்த உண்மைகளை பிறருக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்காகத்தான் எழுதி வருகிறேன்.
என் மதநம்பிக்கை தாக்கப்படும்போது, அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்காமல் சினிமா,அரசியல்,பொழுதுபோக்கு என்று என்னால் எழுத முடியவில்லை. முடியவில்லை என்று சொல்வதை விட எழுத விடவில்லை என்பதே உண்மை.
இனி என் மத நம்பிக்கைகளின் மீதான அதூறுகளுக்கு தமிழ்மணத்தில் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய விளக்கங்கள் அல்லாமல் பொதுவான சமய/சமூக சிந்தனைகளை
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த முடிவில் என் எழுத்தார்வம் மற்றும் இதுவரை பெற்ற தமிழிணைய நண்பர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கமுமே என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி...
தமிழ்மணத்தின் மூலம் "நல்லடியார்" என அறியப்பட்ட நான் <<எதிரொலி>> என்ற வலைப்பூவில் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும் சில எழுதிய அவதூறுகளுக்கு விளக்கம் சொல்லும் கடமையில் எழுதி வந்தேன்.
எனது வலைப்பூ பதிவுகள் http://athusari.blogspot.com என்ற முகவரியில் செயல்பட்டு வந்த போழ்தும், தமிழ்மணம் நிர்வாகிகளின் புதிய விதிமுறைகள் மதம் சார்ந்த அல்லது துவேச கருத்துக்கள் சசத்தியமுள்ள வலைப்பூக்களை திரட்டுவதில்லை என்ற புதிய விதியால் எனது வலைப்பூவும் பட்டியலிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான வலைப்பூக்களும் பட்டியலிலிருந்து நீக்கப்படுள்ளன.
தள நிர்வாகிகளின் இத்தகைய கட்டுப்பாடு தேவையானது என்பதைச் சொல்லிக் கொள்ளும் இதே நேரத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மொழியால் தமிழன்! தேசத்தால் இந்தியன்! மதத்தால் இஸ்லாமியன்! உணர்வால் மனிதன். இதுதான் என் நிலைப்பாடு.
இணையத்தில் சாதாரண வாசகனாக இருந்த என்னை வேதனைப்படுத்தியது ஒன்று உண்டென்றால், இஸ்லாத்திற்கு எதிரான வலைப்பூக்கள். இதுவரை தமிழல்லாத மொழிகளில் அது போன்ற தளங்கள் உலகலாவிய அளவில் இயங்கி வந்தபோது எழாத வருத்தம் சக தமிழர்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயலும் சில சக்திகளின் துவேச எழுத்துக்களால் எழுந்தது.
மத நம்பிக்கை என்பது மனித நல்வழிப்படுத்த தோன்றியவை என சொல்லும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இதுவரையிலும் சகமனிதர்களுடன் நண்பணாய், அண்டை வீட்டுக்காரணாய், சக ஊழியனாய் இருந்து வருகிறேன். இனியும் இதில் மாற்றமிருக்காது.
என் நம்பிக்கையை சிலர் ஏளனப்படுத்தியதாலும் அவதூறாக எழுதியதாலும் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டி மட்டும் இஸ்லாம் சம்பந்தமாக எழுதி வந்தேன். நான் இஸ்லாமிய பிரச்சாரகனோ அல்லது எழுத்தாளனோ அல்ல. நான் அறிந்த உண்மைகளை பிறருக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்காகத்தான் எழுதி வருகிறேன்.
என் மதநம்பிக்கை தாக்கப்படும்போது, அதற்கு தகுந்த விளக்கம் கொடுக்காமல் சினிமா,அரசியல்,பொழுதுபோக்கு என்று என்னால் எழுத முடியவில்லை. முடியவில்லை என்று சொல்வதை விட எழுத விடவில்லை என்பதே உண்மை.
இனி என் மத நம்பிக்கைகளின் மீதான அதூறுகளுக்கு தமிழ்மணத்தில் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய விளக்கங்கள் அல்லாமல் பொதுவான சமய/சமூக சிந்தனைகளை
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த முடிவில் என் எழுத்தார்வம் மற்றும் இதுவரை பெற்ற தமிழிணைய நண்பர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கமுமே என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி...
Subscribe to:
Posts (Atom)